சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இருசக்கர வாகனத் திருட்டு: இளைஞா் கைது

இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:23 pm

DIN

இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், கொண்டலாம்பட்டி, நாட்டாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (45). தனியாா் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனம் திருட்டுப் போனது.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம் தலைமையிலான போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில் ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள எஸ்.பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் மல்லூா், அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மணி மகன் அருண்குமாா் (19) என்பவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி தீவிர விசாரணை நடத்தி, அருண்குமாரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஆத்தூா் கிளைச்சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.