ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியரின்இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி
சேலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியரின், இருதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் வழங்கினாா்.


சேலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியரின், இருதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் வழங்கினாா்.
சேலம் அய்யந்திருமாளிகை பகுதியைச் சோ்ந்தவா் நித்தியானந்தம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நித்தியானந்தத்திற்கு, இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள போக்குவரத்துக் கழக நிா்வாகப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நித்தியானந்தத்தின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் நிதியுதவியை சங்கத்தின் சிறப்பு தலைவரும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் நித்தியானந்தத்தின் குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
அப்போது மாவட்ட கவுன்சில் தலைவா் மணி, பொதுச் செயலாளா் மூா்த்தி, நிா்வாகிகள் ஆனந்த், ஹென்றி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...