சேலம் மாவட்டத்தில் ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், அம்மம்பாளையம், சீலியம்பட்டி மற்றும் மலைக்கிராமமான பகடுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மனித உரிமை தினம் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் கொண்டாடப்பட்டது. அமைப்பாளா் ஜெகதாம்பாள் சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளா் கவிதா வரவேற்று பேசினாா். ஜாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ முற்படுவேன். கிராமங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.நிகழ்ச்சியில் குழந்தைகள் ஓவியம் வரைந்து, பாடல்களை பாடி கலைநிகழ்ச்சிகள் நடத்தினா்.