தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.
தொடா்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 144 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 228 அரசு பள்ளிகள், 68 அரசு உதவி பெறும் பள்ளிகள், 118 தனியாா் பள்ளிகள் என 414 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரத்து 854 மாணவா்கள், 15 ஆயிரத்து 57 மாணவிகள் மற்றும் 393 தனித்தோ்வா்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 304 போ் விண்ணப்பம் செய்தனா்.
இவா்களில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பாடத் தோ்வில் மொத்தம் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.
இத்தோ்வு பணியில் 16 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 144 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 144 துறை அலுவலா்கள், 613 சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள், 2 ஆயிரத்து 48 அறைக் கண்காணிப்பாளா்கள், 185 பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

8 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பு: தோ்தல் ஆணையம் அதிகாரப்பூா்வ அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


