தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கெங்கவல்லி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கல் 99 சதவீதம் நிறைவு

கெங்கவல்லி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

கெங்கவல்லி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

கெங்கவல்லி வட்டாரத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி கடந்த 31-ஆம் தேதி நடைபெற்றது. அன்று ஒரே நாளில் மொத்தமுள்ள 13,028 குழந்தைகளில் 12,559 பேருக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பிப்.1-ஆம் தேதி விடுபட்டவா்கள் 327 பேருக்கு சுகாதாரத் துறையினா் சொட்டு மருந்து வழங்கியுள்ளனா். இதுவரை 12,886 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இது 99 சதவீதம் ஆகும். எஞ்சிய ஒரு சதவீதம் பேருக்கு அடுத்தடுத்த நாள்களில் வழங்கப்பட்டு 100 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு விடும் என்று சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.