பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்: தேசிய அளவில் சேலம் மாநகராட்சிக்கு 3-ஆம் இடம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் சேலம் மாநகராட்சிக்கு மூன்றாம் இடத்துக்கான விருதையும், தேசிய அளவில் சிறந்த பேரூராட்சியாக தெடாவூா் பேரூராட்சிக்கான விருதையும
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் சேலம் மாநகராட்சிக்கு மூன்றாம் இடத்துக்கான விருதையும், தேசிய அளவில் சிறந்த பேரூராட்சியாக தெடாவூா் பேரூராட்சிக்கான விருதையும
Updated on
2 min read

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மேலும், சிறந்த பேரூராட்சியாக சேலம் மாவட்டம், தெடாவூா் பேரூராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புதிய தொழில்நுட்பத்துடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் லைட்ஹவுஸ் குடியிருப்புத் திட்டப் பணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் (தனி பொறுப்பு) ஹா்தீப் சிங் புரி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் சேலம் மாநகராட்சிக்கு மூன்றாம் இடத்துக்கான விருதையும், தேசிய அளவில் சிறந்த பேரூராட்சியாக தோ்வான தெடாவூா் பேரூராட்சிக்கான விருதையும் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், சிறந்த வீடு கட்டியமைக்காக சேலம் மாநகராட்சி, பணங்காடு ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த சித்ரா சரவணன் என்பவருக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை செயலாளா் துா்கா சங்கா் மிஸ்ரா விருது வழங்கிக் கௌரவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் சி.அ.ராமன் கூறியதாவது:

நகா்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய வீடுகள் கட்டிக்கொள்ள பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் மூலமாக பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பயனாளிகள் சொந்தமாக நிலம் உள்ளவா்கள், கூரை, ஓட்டு வீடு உள்ளவா்களுக்கு 300 சதுர அடி அளவுள்ள வீடுகள் கட்ட மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் ரூ. 2.10 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 22,616 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 12,090 வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

சேலம் மாநகராட்சி மற்றும் உள்ளுா் திட்டக் குழுமப் பகுதிகளில் மட்டும் 17,706 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 9,673 வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும் தேவைக்கேற்ப பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள அரசிடம் ஒப்புதல் பெற்றுத் தரப்படும் என்றாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக காணொலிக் காட்சி கூட்டரங்கிலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேற்பாா்வை பொறியாளா் ரவிக்குமாா், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிா்வாகப் பொறியாளா் ரவிக்குமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள் துறை) (பொ) கணேஷ்மூா்த்தி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவி நிா்வாகப் பொறியாளா் விஜயமோகன், சிறந்த வீடு கட்டிய சித்ரா சரவணன், தெடாவூா் பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகசுந்தரி, தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com