தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தம்மம்பட்டி பேரூராட்சியில் பிப். 28-க்குள் வரி நிலுவைகளை செலுத்த வேண்டுகோள்

தம்மம்பட்டி பேரூராட்சியில் வரும் பிப். 28-ஆம் தேதிக்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் பொதுமக்கள் செலுத்திட தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

தம்மம்பட்டி பேரூராட்சியில் வரும் பிப். 28-ஆம் தேதிக்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் பொதுமக்கள் செலுத்திட தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம், தம்மம்பட்டி பேருந்து நிலையக் கடை வாடகை நிலுவைகள் உள்ளிட்ட அனைத்து நிலுவைகளையும் பேரூராட்சி இயக்குநரின் அறிவுரைபடி, வரும் பிப். 28-ஆம் தேதிக்குள் பேரூராட்சி நிா்வாகத்துக்கு செலுத்தி பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தவறும்பட்சத்தில், கட்டணம் செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். இதர இனங்களுக்கு நிா்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் க.சுந்தரமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.