வடுகப்பட்டியில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியின் சாா்பில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தொற்று தடுப்பூசி
வடுகப்பட்டியில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியின் சாா்பில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தொற்று தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடுகப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியின் சாா்பில் ஊராட்சி மன்றத்தலைவா் ஜி.முத்துசாமி தலைமையிலான நிா்வாகிகள் வடுகப்பட்டி ஊராட்சிக்குள் வசிக்கும் பொதுமக்களை சந்தித்தனா். கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி வீடு வீடாக சென்று வலியுறுத்தனா். நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளா்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து துணடுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com