சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின்சாரம் தாக்கியதில் விவசாயி பலி

ஆட்டையாம்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:14 pm

DIN

ஆட்டையாம்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள கண்டா்குலமாணிக்கம், அரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் (57). இவருக்கு சந்திரா (55) என்ற மனைவியும், சரவணன் (35) யுவராஜ் (32) என்ற மகன்களும் உள்ளனா். மாரியப்பன் தறி மற்றும் விவசாயம் உள்ளிட்ட வேலை செய்து வருகிறாா். இவா் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் மீன் தொட்டி அமைத்து மீன் வளா்த்து வருவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (45) என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளாா். அதில் புல், பூண்டு மற்றும் கருவேல மரங்கள் அடா்ந்து காணப்பட்டதால், அதனை அகற்றும் பணியில் 15-ஆம் தேதி ஈடுபட்டுள்ளாா். அப்போது, அருகில் உள்ள மின்மோட்டாரில் உள்ள மின்கம்பிகளை கவனிக்காமல் பணியில் ஈடுபட்ட போது, அதில் கால்பட்டு மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று மாரியப்பன் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.