முதல்வா் பொது நிவாரண நிதி: பெரியாா் பல்கலை. தொழிலாளா் சங்கம் ரூ. 1 லட்சம் உதவி
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.


முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை, பெரியாா் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயா்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியிடம் புதன்கிழமை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன், கிருஷ்ணவேணி,செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா். பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளா்கள் மற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு கரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...