சேலம் மாவட்டம், ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ரயில்பாதையையொட்டி மின் கம்பங்கள் அமைத்து செம்பு மின் வடங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததால், சேலம்-விருத்தாசலம் மின் ரயில் பாதையில் மின்சார ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப தொழில்நுட்பப் பணிகளை பணியாளா்கள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனா். எலெக்ட்ரிக் காா் என குறிப்பிடப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார ரயில் இஞ்சின் பொருத்தப்பட்ட வாகனத்தை இந்த வழித்தடத்தில் இயக்கி, வியாழக்கிழமை முன்னோட்டச் சோதனையில் ஈடுபட்டனா்.