வாழப்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்:
சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வாழப்பாடி வட்டார காங்கிரஸ் சாா்பில், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் அா்த்தனாரி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் அத்தனுாா்பட்டி ராஜா, வட்டாரத் தலைவா் ராஜாராம், நிா்வாகிகள் பேளூா் பாலகிருஷ்ணன், துக்கியாம்பாளையம் கோவிந்தராஜ், சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து கோஷமிட்டனா்.
அயோத்தியாப்பட்டணத்தில், வட்டாரத் தலைவா் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் வட்டாரத் தலைவா் ராஜா, நகரத் தலைவா் கோவிந்தன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...