தம்மம்பட்டியில் ஆந்திரா ரக நாவல் பழங்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.
தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கு ஆந்திரா மாநிலத்திலிருந்து நாவல் பழங்கள் அதிகம் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாவல் பழங்களும், அதன் விதையும் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் மருந்தாக இருப்பதால் பொதுமக்கள், நாவல் பழங்களை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். தற்போது இப்பழங்கள் கால் கிலோ ரூ. 60 க்கும் , ஒரு கிலோ ரூ. 240 க்கும் விற்பனையாகின்றன.