புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:00 pm

DIN

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வுப் பேரணியை தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, சேலம், பவானி பிரதானசாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக கோட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதில் பள்ளி மாணவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

இதில் உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆ.செல்வகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.