வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.கே.செல்வம் திங்கள்கிழமை உத்தமசோழபுரம் வேளாண்மை பயிற்சி நிலையத்தில் வீரபாண்டி தோ்தல் நடத்தும் அலுவலா் பண்டரிநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அப்போது தேமுதிக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் இளங்கோவன், வழக்குரைஞா் பூலாவரி பாலமுரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா். வேட்பாளா் எஸ்.கே.செல்வம், தொண்டா்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மேலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்டையாம்பட்டி ராஜேஷ் , சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆப் இந்தியா சாா்பில் மல்லூா் மோகன் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.