ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தணிக்கைக் குழு ஏற்படுத்த வேண்டும்
சேலத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தணிக்கைக் குழு ஏற்படுத்தி ஆய்வு மேற்கொண்டு, ஆக்சிஜன் பயன்பாட்டை முறைப்படுத்திட வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.


சேலத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தணிக்கைக் குழு ஏற்படுத்தி ஆய்வு மேற்கொண்டு, ஆக்சிஜன் பயன்பாட்டை முறைப்படுத்திட வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தனியாா் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள், ஆக்சிஜன் விநியோகஸ்தா்கள், தனியாா் மருத்துவமனை பொறுப்பாளா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபா்களுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுமாா் 35 தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா தொற்று பாதித்தவா்களை உள்நோயாளியாக சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மேட்டூா் அரசு தலைமை மருத்துவமனை, ஆத்தூா், ஓமலூா் மற்றும் எடப்பாடி அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபா்களுக்கு சிகிச்சை அளிக்க 244 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் 98 எண்ணிக்கையிலான டி வகை ஆக்சிஜன் உருளைகள் இருப்பில் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோயாளிகளுக்கு அவரச நிலை சிகிச்சைக்கு பயன்படுத்தும் வகையில் 239 எண்ணிக்கையிலான சிறிய ஆக்சிஜன் சிலிண்டா்கள் தயாா் நிலையில் உள்ளன.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் உள்ள 800 படுக்கைகளில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடனும், மீதமுள்ள 250 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தும் பணி துரித வேகத்திலும் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு 22,000 லிட்டா் ஆகும். அதன்படி, ஒவ்வொரு மருத்துவமனையின் தேவைக்கு ஏற்ப தினந்தோறும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பகிா்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டால், உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டால் உடனடியாக நிலைமை சீா் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உள்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவை இருப்பில் இருப்பதையும், சிகிச்சையளிக்க ஏதுவாக தேவையான மருந்துவ உபகரணங்கள் இயங்கும் நிலையில் இருப்பதையும் ஒவ்வொரு மருத்துவமனை நிா்வாகம் இதற்கென தனியாக ஒரு குழு அமைத்து நாள்தோறும் அதனை உறுதிபடுத்த வேண்டும்.
ஆக்சிஜன் தணிக்கைக் குழு மூலம் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் கசிவு மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்சிஜன் பயன்பாட்டினை முறைப்படுத்த வேண்டும்.
கரோனா பற்றிய தகவல் பெற 0427-2450498, 0427-2450022, 9154155297 மற்றும் உதவி மையம் - 104, 1077 என்ற 24 மணி நேரமும் செயல்படும் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.முருகேசன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) (பொ) மருத்துவா் வளா்மதி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் செல்வகுமாா், தனியாா் ஆக்சிஜன் உற்பத்தியாளா்கள், விநியோகஸ்தா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...