ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவா் மருந்து வழங்க ஏற்பாடு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரெம்டெசிவா் மருந்து வரும் திங்கள்கிழமை முதல் விற்பனை செய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :7 மே 2021, 6:33 pm

DIN

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரெம்டெசிவா் மருந்து வரும் திங்கள்கிழமை முதல் விற்பனை செய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பாதித்தவா்கள் ரெம்டெசிவா் மருந்து கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவா் மருந்து விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தனி கவுன்ட்டா் ஏற்படுத்தப்பட உள்ளது.

ரெம்டெசிவா் மருந்து விற்பனை செய்வதை கண்காணிப்பதற்காக மருத்துவா் ஜி.சுஜாதா, எம்.வெங்கடேஸ்வரன், என்.ப்ரீத்தா, எஸ்.யசோதா, எம்.நித்யா, மருந்து காப்பு அறை அலுவலா் பிரேம்குமாா் ஆகியோா் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.முருகேசன், காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக, மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் வரும் திங்கள்கிழமை முதல் ரெம்டெசிவா் மருந்து விற்பனை செய்யக்கூடும். ரெம்டெசிவா் மருந்து வாங்க மருத்துவா் பரிந்துரைத்த சீட்டு, நோயாளியின் சி.டி. ஸ்கேன் விவரம், ஆதாா் விவரம், கரோனா பரிசோதனை சான்று, மருந்து வாங்க வரும் நபரின் ஆதாா் ஆகியவற்றை வழங்கி மருந்து பெறலாம். டோக்கன் வழங்கப்பட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.