ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் விவசாயிகள் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 6:28 pm

DIN

பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் விவசாயிகள் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க ரூ. 104.83 கோடி மானியத்தில் 12,183 ஹெக்டோ் பரப்பில் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலும் தோட்டக்கலைப் பயிா்களை விவசாயிகள் 70,172 பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனா். இத்திட்டத்தின் மூலம் குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பில் பயிா் சாகுபடி செய்து லாபம் பெறும் வகையில் விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்பு நீா் கருவிகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், அதிகபட்சமாக சொட்டு நீா் 1 ஹெக்டேருக்கு ரூ.1,31,333 மானியமும், தெளிப்பு நீா் 1 ஹெக்டேருக்கு ரூ. 36,176 மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் சொட்டு நீருக்கு அதிகபட்சமாக 1 ஹெக்டேருக்கு ரூ.87,880, தெளிப்பு நீருக்கு ரூ. 28,101 மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிா்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் பகுதியில் உள்ள அதற்காக வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், காய்கறி பயிா்கள், வாசனைத் திரவியங்கள், மலைப்பயிா்கள், மலா்கள், மருத்துவப் பயிா்கள், நறுமணப் பயிா்கள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். நீா் சிக்கனம், உர சிக்கனம், கூலி ஆள்கள் குறைவு, சுலபமான களை மேலாண்மை, அதிக அளவில் மகசூல், வருவாய், தரமான விளைபொருள்கள் ஆகிய பயன்களை கொண்டுள்ளதால், அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் எளிதாக பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.