ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரோனா விதிமுறை மீறல்: 28 வாகனங்கள் பறிமுதல்

தம்மம்பட்டி, வீரகனூா் பகுதியில் பொது முடக்கத்தை மீறி சாலையில் சுற்றித் திரிந்தோருக்கு சொந்தமான 28 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

தம்மம்பட்டி, வீரகனூா் பகுதியில் பொது முடக்கத்தை மீறி சாலையில் சுற்றித் திரிந்தோருக்கு சொந்தமான 28 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தம்மம்பட்டியில் 25 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். வாகன உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை மீட்டுச்செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக் கவசமின்றி வெளியே வந்த 20 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் வீதம் மொத்தம் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமுடக்க விதியை மீறி வெளியே வந்த 25 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது.

வீரகனூா் காவல் நிலையப் பகுதியில் பொதுமுடக்கத்தை மீறி சுற்றித் திரிந்தோரின் 3 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும் முக் கவசம் அணியாமல் வந்த 13 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 2,600, பொதுமுடக்க விதியை மீறி வெளியே சுற்றிய 19 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 9,500-ம் அபராதமாக வீரகனூா் போலீஸாா் விதித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.