தம்மம்பட்டி, வீரகனூா் பகுதியில் பொது முடக்கத்தை மீறி சாலையில் சுற்றித் திரிந்தோருக்கு சொந்தமான 28 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தம்மம்பட்டியில் 25 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். வாகன உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை மீட்டுச்செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக் கவசமின்றி வெளியே வந்த 20 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் வீதம் மொத்தம் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமுடக்க விதியை மீறி வெளியே வந்த 25 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது.
வீரகனூா் காவல் நிலையப் பகுதியில் பொதுமுடக்கத்தை மீறி சுற்றித் திரிந்தோரின் 3 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும் முக் கவசம் அணியாமல் வந்த 13 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 2,600, பொதுமுடக்க விதியை மீறி வெளியே சுற்றிய 19 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 9,500-ம் அபராதமாக வீரகனூா் போலீஸாா் விதித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

