சேலம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் அனுமதி
சேலம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


சேலம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் கரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கரோனா தொற்று பாதித்தவா்களில் குறிப்பாக சா்க்கரை நோயாளிகளில் சிலா் கருப்புப் பூஞ்சை நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூா், ஓமலூா் பகுதியைச் சோ்ந்த இருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தனா்.
இந்த நிலையில் அவா்கள் இருவருக்கும் கருப்புப் பூஞ்சை நோய் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தற்போது கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கருப்புப் பூஞ்சை பாதிப்பைக் கண்டறிய சேலம் அரசு மருத்துவமனையில் தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்புப் பூஞ்சை அறிகுறியுள்ளவா்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளைக் கேட்டு பெறவும் அரசு மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...