டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி தற்கொலை

ஓமலூா் அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஓமலூா் அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள ஒண்டிவீரனூா் கிராமம், பாரதிபுரத்தைச் சோ்ந்த பாப்பாத்திக்கு (47), சிறுநீரகத்தில் கல் பிரச்னை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், நாட்டு வைத்தியம் பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில், தொடா் மழையால் பாப்பாத்திக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ஓமலூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உள்நோயாளியாக சோ்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா். அதில், அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கழிவறைக்குச் சென்ற பாப்பாத்தி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், செவிலியா்கள் உள்ளே சென்று பாா்த்த போது கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த ஓமலூா் போலீஸாா், பாப்பாத்தி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.