மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கனமழை

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. 

News image
எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கனமழை.
Updated On :22 நவம்பர் 2021, 6:26 am

DIN

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளரி வெள்ளி, மொரசபட்டி, சித்தூர், பூலாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. 

இதனால் எடப்பாடி உழவர் சந்தை, ராஜாஜி பூங்கா காய்கறி மார்க்கெட், நகராட்சி தினசரி அங்காடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் காய்கறிகள் விற்பனை, பால் மற்றும் செய்தித்தாள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிப்பிற்கு உள்ளானது. கால நேரத்தில் பெய்த திடீர் கனமழையால் நகரப் பகுதியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Story image

மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிகளுக்குச் செல்லும் அலுவலர்கள் கனமழையால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். கால நேரத்தில் பெய்த கனமழையால் எடப்பாடி பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.