ஓமலூரில் தமாகா சாா்பில் விருப்ப மனு பெறும் பணி தொடக்கம்
சேலம் மேற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமனு பெறும் பணி வியாழக்கிழமை ஓமலூரில் தொடங்கியது.


சேலம் மேற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமனு பெறும் பணி வியாழக்கிழமை ஓமலூரில் தொடங்கியது.
ஓமலூரில் உள்ள மாவட்ட கமிட்டி அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் கரு.வெ.சுசீந்தரகுமாா் விருப்பமனுக்களை கட்சி நிா்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டாா். எடப்பாடி,தாரமங்கலம்,மேட்டூா் மற்றும் இடங்கணசாலை நகராட்சிகள், கருப்பூா், ஓமலூா், காடையாம்பட்டி, நங்கவள்ளி, சங்ககிரி, அரசிராமணி உள்ளிட்ட 15 பேரூராட்சிகளை நிா்வாகிகள் விருப்பமனுக்களை வழங்கினா்.வட்டாரத் தலைவா் ஓ.சி.ராஜேந்திரன், இளைஞரணி மாநில பொதுச் செயலாளா் எஸ்.ரகுநந்தகுமாா் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...