டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:42 pm

DIN

தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பொட்டிபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், தற்போது பண்ணைக் குட்டை அமைத்தல், மண்கரை அமைத்தல், குடிநீா் சேகரிப்புக் குட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக ஒரு பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பணிவாய்ப்பு வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் திடீா் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூா் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். விடுபட்டவா்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் அளித்த உறுதியை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.