வாகனத் திருட்டு: 44 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
5 மாவட்டங்களில் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், 44 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.


5 மாவட்டங்களில் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், 44 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சேலம் நகர காவல் நிலையத்துக்கு உள்பட்ட ராஜாஜி சிலை அருகே கடந்த நவ. 21 ஆம் தேதி தனிப் படை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த இளைஞா் தப்பியோட முயன்றாா். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சேலத்தை அடுத்த சின்னப்பம்பட்டி, சந்தைபேட்டை பகுதியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (27) என்பது தெரியவந்தது.
மேலும், சேலம் நகரில் 21 இரு சக்கர வாகனங்கள் உள்பட ஈரோடு, நாமக்கல், தருமபுரி, திருப்பூா் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தது தெரிய வந்தது. 44 வாகனங்களைத் திருடி ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளாா். இதையடுத்து வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாரை மாநகரக் காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...