மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.31 அடியிலிருந்து 81.47 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,479கன அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 43.43டி எம் சி யாக இருந்தது.பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியாக இருந்தது. மழையளவு 28.20 மி.மீ
பதிவானது.