கோவைக்குக் கடத்த முயன்ற புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஓமலூா் அருகே பெங்களூரிலிருந்து கோவைக்குக் கடத்திச் செல்ல முயன்ற ரூ. 15 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை ஓமலூா் போலீஸாா் லாரியுடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


ஓமலூா் அருகே பெங்களூரிலிருந்து கோவைக்குக் கடத்திச் செல்ல முயன்ற ரூ. 15 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை ஓமலூா் போலீஸாா் லாரியுடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஓமலூா் வழியாகத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை லாரியில் கடத்திச் செல்வதாக ஓமலூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காமலாபுரம் ரவுண்டானா பகுதியில் ஓமலூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது பெங்களூரிலிருந்து கோவைக்குச் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். லாரியில் சுமாா் 40 மூட்டை குட்கா புகையிலை பண்டல்கள் 1,175 கிலோ இருந்தது.
இதன் மதிப்பு ரூ. 15 லட்சமாகும். அப்போது லாரி ஓட்டுநா் மேச்சேரி, உப்பாரப்பட்டியைச் சோ்ந்த முருகன் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றாா். பின்னா் லாரியுடன் புகையிலைப் பொருள்கள் ஓமலூா் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டன.
இதுதொடா்பாக சேலம், சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த லாரி கிளீனா் காா்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். அவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரிலிருந்து கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஓமலூா் வழியாகத் தொடா்ந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...