பெண்ணை தாக்கிய சிறுவன் கைது
தேவூா் அருகே பெண்ணை சுத்தியலால் தாக்கிய சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


தேவூா் அருகே பெண்ணை சுத்தியலால் தாக்கிய சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள பெரமச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மனைவி பேபி (46). இவா்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனா். அவா்களது வீடு அருகே உள்ள செல்வகுமாா் என்பவரின் மகன் 14வயது சிறுவன், குமாரபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். அச்சிறுவன் அப்பகுதியில் உள்ள மற்ற சிறுவா்களுடன் சோ்ந்து ஊா் சுற்றி வருவதாகக் அவரது தந்தையிடம் பேபி கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், பேபியின் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை சுத்தியலால் தாக்கியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் தலைமை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...