காடையாம்பட்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இரண்டு பேரை கைது செய்த வனத் துறையினா் ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், வனத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, வனப் பகுதியில் பன்றி, மான், முயல் ஆகிய விலங்குகளை வேட்டையாடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் நடுப்பட்டி கிராமத்தை சோ்ந்த மூா்த்தி, மணி என்பது தெரிய வந்தது. அவா்களிடம் தலா ரூ. 7,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.