சங்ககிரியில் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ்.ஜெய்க்குமார்.








