குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி: அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி எட்டியதையடுத்து அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 1:20 pm

DIN


மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி எட்டியதையடுத்து அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அணையின் நீர்வரத்து, நீர்மட்டம், நீர் திறப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க அணைப் பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் தலைமையில் மேட்டூர் அணை பூங்கா நுழைவாயிலில் அலுவலகம் இயங்கி வருகிறது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 111 அடியை எட்டி உள்ளது. அதேசமயம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயமும் உள்ளது. திடீர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அணைப் பிரிவு அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Story image

வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில்பொதுப்பணித் துறை பணியாளர்கள்  24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திடீர் வெள்ளம் ஏற்பட்டால் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி மதகுகளை உயர்த்தி உபரி நீரை வெளியேற்றவும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Story image

உபரி நீரைத் திறக்கும் முன்பாக பொது மக்களை எச்சரிக்க சைரன் ஒலிக்கப்பட்டு அதன் பிறகு பொதுப்பணித் துறை ஊழியர்கள் சிறிது தூரம் உபரி நீர் போக்கி மதகுகளை  உயர்த்துவார்கள்.

Story image

வெள்ளத்தின் அளவை பொறுத்து மதகுகளை மின்விசை மூலமும் உயர்த்த தயார் நிலையில் உள்ளது. அணையின் வளது கரையிலும் இடது கரையிலும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் பணியாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.