/

சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு 17 ஆண்டு சிறை

ஓமலூா் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:00 pm

DIN

ஓமலூா் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஓமலூா் மாவட்டம் மேட்டுமாறனூா் ஆரூா்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (24). இவா் கடந்த 2010 பிப்ரவரி மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதுதொடா்பாக தாரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கு விசாரணை சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குமாருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து குமாரை போலீஸாா் கோவை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.