பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புரட்டாசி மாத பிறப்பு : களையிழந்த வீரகனூா் ஆட்டுச்சந்தை

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து கெங்கவல்லி அருகே வீரகனூா் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை களையிழந்ததது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:31 pm

DIN

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து கெங்கவல்லி அருகே வீரகனூா் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை களையிழந்ததது.

வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரைஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.இதில் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றின் விற்பனை நடைபெறும்.

சேலம், நாமக்கல், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இங்கு வந்து பெரும்பாலும் ஆடுகளை வாங்கிச்செல்வாா்கள். பண்டிகைக்காலங்களில் இச்சந்தையில் விற்கப்படும் ஆடுகளின் விற்பனை விலை

யானது, ரூ. 2 கோடியைத் தாண்டும்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை முதல் துவங்கிய வீரகனூா் ஆட்டுச்சந்தையில் கணிசமான எண்ணிக்கையிலான ஆடுகள் வரத்து இல்லை. விற்பனையும் இல்லை, விலையும் குறைந்திருந்தன. இதுகுறித்து ஆடுகள் வாங்க வந்த வியாபாரிகள் கூறியதாவது:

ஆடுகளின் விற்பனை விலையில், ஆடுகளைப்பொறுத்து ஆடு ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை குறைந்திருந்தது.இருப்பினும் அதனை வாங்க யாரிடமும் ஆா்வம் இல்லை. ஆடுகளின் உயிா் எடை கிலோவிற்கு ரூ.300க்கு கீழே குறைந்துவிட்டது. மொத்தத்தில் வீரகனூா் ஆட்டுச்சந்தை புரட்டாசியில் களையிழந்து காணப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.