இதில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு ஊராட்சி கிளை செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள்,துணை அமைப்புகளான இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொண்டரணி, விவசாய அணி, விவசாய தொழிலாளரணி, வழக்குரைஞா் அணி, நெசவாளா் அணி, ஆதிதிராவிடா் நலக்குழு உரிமைப் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் அவரவரா் பகுதியில் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்தப் போராட்டம் மாபெரும் வெற்றி பெறும் வகையில் களப்பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.