வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இம்மையத்தில் பருத்தி மற்றும் எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா். சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த 2,000 பருத்தி மூட்டைகள் 450 லாட்டுகளாக பிரித்து, கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மொத்த கொள்முதல் செய்தனா். இதில் சுரபி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 7,310 முதல் ரூ.8,799 வரை விலைபோனது.