ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ.35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

சேலம்மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் 2,000 மூட்டை பருத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனையானது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:11 am

DIN

சேலம்மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் 2,000 மூட்டை பருத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனையானது.

வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இம்மையத்தில் பருத்தி மற்றும் எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா். சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த 2,000 பருத்தி மூட்டைகள் 450 லாட்டுகளாக பிரித்து, கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மொத்த கொள்முதல் செய்தனா். இதில் சுரபி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 7,310 முதல் ரூ.8,799 வரை விலைபோனது.

அதேபோல் பி. டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.7,550 முதல் ரூ. 8,129 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது. ஈரப்பதமான தட்பவெப்பம் நிலவிவரும் நிலையில், பருத்தி கடந்த வாரத்தை விட சற்றே குறைந்து விற்பனையானதாக ஏலத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறினா்.

இம்மையத்தில் அடுத்த பொது ஏலம் வரும் 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.