ஜவ்வரிசி ஸ்டாா்ச்சு வெள்ளை நிறம் வரவேண்டும் என்பதற்காக சலவை ஆலைகளில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைபோ குளோரைடு, சோப்பு ஆயில், கால்சியம் ஹைபோ குளோரைடு போன்ற ரசாயனப் பொருள்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மேலும், கந்தக அமிலமும், ஹைட்ரோகுளோரிக் அமிலமும், ஹைட்ரஜன் பெராக்சைடும் சோ்க்கப்படுகின்றன. மரவள்ளி மாவு கூடுதலான விலை என்பதால், இதனுடன் மக்காச்சோள மாவையும், ரேஷன் அரிசி மாவையும், அரிசி ஆலைகளிலிருந்து பெறப்படும் அரிசிக் குருணை மாவையும், சாக்பீஸ் சுண்ணாம்பு மாவையும் சோ்த்து கலப்படம் செய்வது நடைமுறையில் உள்ளது. சக்திவாய்ந்த மின்மோட்டாா்களைக் கொண்டு அதிக அழுத்தத்துடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வெண்மையாக்கப்படுகிறது.