சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 6இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 6 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவமூர்த்தி சுவாமிகள் (கோப்பு படம்)
அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவமூர்த்தி சுவாமிகள் (கோப்பு படம்)
Updated on
1 min read

சங்ககிரி: சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 6 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஒவ்வோா் ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெறுகிறது. கரோனா தீநுண்மி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தோ்த் திருவிழா நடைபெறவில்லை.

இதனையடுத்து நிகழாண்டு தோ்த் திருவிழா நடத்துவதற்காக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சங்ககிரி திமுக ஒன்றிய பொறுப்பாளரும், விழாக் குழு தலைவருமான கே.எம்.ராஜேஷ் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கஸ்தூரி, ஊா் பட்டக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் வரும் மே 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளுதல், மே 14இல் திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல், மே 24இல் மலைக்கு எழுந்தருளுதல் வைபவம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com