தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

சேலம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டா் பாலமுருகன் தலைமையில், அம்மாபேட்டை போலீஸாரும் இணைந்து வியாழக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனா்.

பொன்னம்மாபேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை சோதனையிட்டதில், பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த பிரவீன்குமாா் (33), நெத்திமேட்டைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (35) ஆகியோரை கைது செய்தனா்.

விசாரணையில், பொன்னம்மாபேட்டை பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மாவாக அரைத்து உணவகங்கள், அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.