தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 28) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையடுத்து, ஆட்சியா் மற்றும் விலங்குகள் நலவாரிய மண்டல செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 28) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையடுத்து, ஆட்சியா் மற்றும் விலங்குகள் நலவாரிய மண்டல செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் அமைவிடங்களை வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்து, பாதுகாப்பு குறைபாடு இருக்கும் சூழலை சரிசெய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது, ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், கெங்கவல்லி வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

உலிபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.