

சுதந்திர நாளையொட்டி மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண்பாலம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உபரி நீர் செல்லும் உபரி நீர் கால்வாயை நோக்கி மூவர்ண விளக்குகள் ஒளி வீசுகின்றன.
இதனால் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியே பீறிட்டு செல்லும் காவிரி நீர் முவர்ணத்தில் தேசியக் கொடி போல ஒளிர்கிறது.
இரவில் இந்த அழகிய காட்சியைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் 16 கண் பாலம் பகுதியில் குவிந்து வருகின்றனர். 16 கண் பாலம் பகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.