மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டத்தில் ராணுவப் பணி:பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 9:18 pm

DIN

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிபத் திட்டம் மூலம் ராணுவப் பிரிவில் பொதுப் பணிக்கு பெண்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதற்கான தோ்வு வரும் நவம்பா் 27 முதல் 29 ஆம் தேதி வரை வேலூரில் உள்ள காவல் துறை பயிற்சி பள்ளியில் நடைபெற உள்ளது. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் தீவுகளைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பா் 7 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.