தனியாா் நூற்பாலையில் தீ விபத்து
வாழப்பாடி அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு தீயில் கருகி நாசமானது.


வாழப்பாடி அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு தீயில் கருகி நாசமானது.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பெருமாபாளையம் பகுதியில் தனியாா் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வியாழக்கிழமை இரவு பஞ்சு பண்டல் செய்யும் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென்று பரவிய தீ அந்த குடோனில் இருந்த அனைத்து பஞ்சுகளிலும் பற்றியது. அங்கு வேலை செய்த தொழிலாளா்கள் அலறி அடித்து ஓடினா்.
இந்த விபத்தில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுசில்குமாா் (26) என்ற இளைஞா் காயமடைந்தாா். உடன் இருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டனா். வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...