தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூர்:  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

மேட்டுரை அடுத்த நங்கவள்ளியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜூலை 2022, 6:23 am

DIN

மேட்டூர்: மேட்டுரை அடுத்த நங்கவள்ளியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Story image

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அறிவித்தபடி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். மகளிருக்கு ரூ 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்ய வேண்டும் உட்பட  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பாஜகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Story image

நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு சேலம் மாவட்ட பாஜக தலைவர் எஸ்.சூதீர் முருகன் தலைமை வகித்தார், மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ஹரிராமன் வரவேற்றுப் பேசினார். சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்ஸ்சரண், பொதுக்குழு உறுப்பினர் என்.அண்ணாதுரை, நங்கவள்ளி கிழக்கு மண்டல தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.