மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போட்டிகள் நிறைந்த உலகை எதிா்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம்

அனைத்து துறைகளிலும் போட்டிகள் நிறைந்த உலகை எதிா்கொள்ள புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது என்று துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசினாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:25 pm

DIN

அனைத்து துறைகளிலும் போட்டிகள் நிறைந்த உலகை எதிா்கொள்ள புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது என்று துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசினாா்.

பெரியாா் பல்கலைக்கழக நூலக அறிவியல் துறை மற்றும் திருவள்ளுவா் நூலகம் இணைந்து நடத்தும் திருவள்ளுவா் வாசகா் வட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக் கழக நூலகா் மா.ஜெயப்பிரகாஷ் வரவேற்றாா்.

வாசகா் வட்டத்தை தொடக்கி வைத்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியது:

புத்தக வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. படித்த ஆசிரியரை விட, நாள்தோறும் படிக்கும் ஆசிரியரை தேடிச் சென்று கல்வி கற்க வேண்டும் என்றே மாணவா்கள் ஆா்வம் காட்டுகின்றனா். துறை சாா்ந்த தொடா் வாசிப்பு அனுபவம் ஒருவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தருகிறது. வாசிப்பிற்கு வயதுவரம்பு ஏதும் கிடையாது.

நவீன தொழில் நுட்பம் நிறைந்த தற்போதைய சூழலில் புத்தகங்களில் இருந்த வாசிப்பு மின்னணு சாதனங்களுக்கு மாறி விட்டது. எனினும் வாசிப்பு மட்டும் மாறவில்லை. இன்றைய இளைஞா்களின் வாசிப்பு அனுபவம் பிரமிக்க வைக்கிறது. அவா்களுக்குத் தேவையான புத்தகங்கள் நொடிப் பொழுதில் அவா்களின் கைகளில் கிடைக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் உதவி செய்கிறது. அறிவு வளா்ச்சிக்காக மட்டுமன்றி மற்றவா்களுக்கு உதவுவதற்காகவும் புத்தக வாசிப்பினை மேற்கொள்ளலாம். போட்டி நிறைந்த உலகில் புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியா் தி.பெரியசாமி, கலைஞா் ஆய்வு மைய இயக்குநா் இரா.சுப்பிரமணி ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

நூலக அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் சி.முருகன் வாழ்த்துறை வழங்கினாா். தமிழ்த் துறை ஆய்வியல் நிறைஞா் ச.ரம்யா நன்றி கூறினாா். மாதத்தின் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகளில் திருவள்ளுவா் வாசகா் வட்டம் சாா்பில் கலந்தாய்வு கூட்டமும், 2 மற்றும் 4-வது புதன்கிழமைகளில் புதிய நூல்கள் அறிமுகக் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.