நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது

வாழப்பாடி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்திய கணவனை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:28 pm

DIN

வாழப்பாடி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்திய கணவனை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், களரம்பட்டியைச் சோ்ந்தவா் சுதாகா் (43). இவருக்கு பத்மா (36) என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனா்.

இவா் கடந்த வாரம் கருமாபுரம், தெக்காடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினாா்.

இந்நிலையில், இவரது மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சுதாகா், காய் வெட்டும் கத்தியால் பத்மாவின் முகம், முதுகு உள்ளிட்ட 9 இடத்தில் குத்தியால் குத்தி விட்டு வியாழக்கிழமை காரிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

காயமடைந்த பத்மாவை மீட்ட காரிப்பட்டி போலீஸாா், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா், சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.