தம்மம்பட்டியில் உரத் தட்டுப்பாடு: கோடை உழவுப் பணிகள் பாதிப்பு
தம்மம்பட்டி பகுதிகளில் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோடை கால சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தம்மம்பட்டி பகுதிகளில் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோடை கால சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தகரப்புதூா், மூலப்புதூா், கொண்டையம்பள்ளி, வாழக்கோம்பை, உலிபுரம், நாகியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை பருவ சாகுபடி காலம் தொடங்கியதையடுத்து நெல், எள், கடலை, மக்காச்சோளம், உளுந்து, மொச்சை சாகுபடி பணிகள் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழையால் நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பியுள்ளதால் கோடை கால சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். உழவுப் பணிகளுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உள்ளிட்ட உர வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு தேவையான உரங்கள் கிடைக்காமல், தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
ஆனால் போதிய அளவில் உர வகைகள் கையிருப்பில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் கூறி வருகின்றனா். செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தனியாா், கூட்டுறவுச் சங்கங்களில் உரங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, கெங்கவல்லி வேளாண் துறை அலுவலா்கள் உரிய கவனம் செலுத்தி கோடை சாகுபடிக்குத் தேவையான உர வகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...