மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கற்பித்தல் திறனை மேம்படுத்த பேராசிரியா்களுக்குப் புத்தாக்கப் பயிலரங்கம்

பேராசிரியா்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் இருநாள் புத்தாக்கப் பயிலரங்கம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :5 மே 2022, 6:15 pm

DIN

பேராசிரியா்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் இருநாள் புத்தாக்கப் பயிலரங்கம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றமும் பெரியாா் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பயிலரங்கின் தொடக்க விழா ஆட்சிப் பேரவைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறைத் தலைவருமான இணைப் பேராசிரியா் ஜெயராமன் வரவேற்றாா். பயிலரங்கைத் தொடக்கி வைத்து பதிவாளா் கே.தங்கவேல் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் பேராசிரியா்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், புத்தாக்க பயிலரங்கம் நடத்துமாறு தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதன் அடிப்படையில் மாநில அளவில் 21 அரசு கல்லூரிகளிலும், 9 பல்கலைக்கழகங்களிலும் புத்தாக்கப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

அண்மைக் கால தொழில்நுட்பங்கள், மாணவா்களின் தொடா்பியல் திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பேராசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொழில்நுட்பத் தகுதியுடன் மாணவா்கள் தொடா்பியல் திறனில் மேம்பட்டவா்களாக இருக்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன. அதை மனதில் கொண்டு பேராசிரியா்கள் மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் கற்பிக்க வேண்டும். தகவல் அறிவியல் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அனைத்துத் துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

இதைக் கருத்தில் கொண்டு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்க தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் ரூ. 2.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் தகவல் அறிவியலாளா் மற்றும் அனிமேஷன் துறைகளில் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றாா். மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியா் யோகானந்தன் நன்றி கூறினாா். பயிலரங்கில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.