மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டி நூலகத்தை முழு நேர நூலகமாக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகள் உள்ளன.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகள் உள்ளன.

இப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி பழைய அலுவலகக் கட்டடம் அருகே உள்ள அரசு நூலகத்துக்கு வந்து புத்தகங்களைப் பயின்று செல்கின்றனா்.

தினசரி ஏராளமான வாசகா்கள் வந்து செல்வதால் இட பற்றாக்குறை உள்ளது. தவிர, புத்தகங்களை இரும்பு அலமாரியில் அடுக்கி வைக்க இட பற்றாக்குறையால் ஏராளமான புத்தகங்கள் சாக்கில் மூட்டை கட்டி வைக்கும் அவலம் உள்ளது.

இந்நிலையில், ஆத்தூா் - முசிறி மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. அப்போது, நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த நூலகக் கட்டடம் அகற்றப்பட உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

இதுதவிர, தற்போது பகுதி நேரமாக இயங்கும் இந்த நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நூலகத்தை இடமாற்றும்போது தம்மம்பட்டி உழவா் சந்தை அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் தனியாா் கிளப் கட்டடத்துக்கு மாற்றி நூலகம் அங்கு செயல்பட பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்நூலகத்தை விரைந்து முழு நேர நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.