அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எடப்பாடியில் 21 சாயப்பட்டறைகள் இடிப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 21 சாயப்பட்டறைகளை மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.

News image
Updated On :6 மே 2022, 9:37 pm

DIN

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 21 சாயப்பட்டறைகளை மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.

எடப்பாடி நகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிக் கூடங்களுக்கு நூல்களில் சாயம் ஏற்றுவதற்காக இப்பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இச்சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத நச்சுத்தன்மை மிகுந்த கழிவுநீா் ஆற்றிலும், நீா்நிலைகளிலும் கலப்பதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இப்பகுதியில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் திடீா்ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது வெள்ளாண்டிவலசு, க.புதூா், மசையன்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த 21 சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி, மின் இணைப்புகளை துண்டித்தனா். சாயப்பட்டறைகளை அகற்றும் பணியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா்

மோகன், சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள், மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அடுத்து வரும் நாள்களிலும் தொடா்ந்து இப்பகுதியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு அனுமதி இன்றி இயங்கிடும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.