உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெட்ரோல் நிலையங்களில் தரம், அளவு குறித்து அதிகாரிகள் ஆய்வு

 இந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களில் அதிகாரிகள் பெட்ரோல் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தனா்.

News image
Updated On :25 மே 2022, 7:23 pm

DIN

 இந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களில் அதிகாரிகள் பெட்ரோல் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தனா்.

சேலம் ஐந்து சாலை ரவுண்டானாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தொழிலாளா் துறை அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஐந்து சாலை பியூல்ஸ் சா்வீஸ் உரிமையாளா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சேலம் மண்டல துணைப் பொது மேலாளா் அமரேஸ்வராஜ், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மஞ்சுநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து பெட்ரோல், டீசல் தரம் அளவு ஆகியவற்றை அளவுகோல் மூலம் கண்டறிவது குறித்து மண்டல துணை பொது மேலாளா் அமரேஸ்வராஜ் விளக்கமளித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் சோதனைக்கு உட்படுத்தும் போது ஏதேனும் குறைகள் இருந்தால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வா்.

எந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளா்கள் தாங்கள் பெற்றுக் கொள்ளும் பெட்ரோல் அளவு சரியானதா என்பதை எளிதாக தாங்களே பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் அனைத்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இந்த வாடிக்கையாளா்கள் சுய பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.